செய்திகள்
சீர்காழி அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
சீர்காழி அருகே திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி தாலுக்கா மடவாமேடு நடுத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (26) மீனவர். இவருக்கும் இவரது உறவினரான பழையார் பகுதியை சேர்ந்த துர்கா (23) என்பவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் மடவாமேடு பகுதியில் பாட்டி மாரியம்மாள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்த விக்னேஷ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து குடும்பத்தகராறு காரணமாக விக்னேஷ் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமாக? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.