செய்திகள்
பணியிட மாற்றம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: மாவட்ட போலீஸ் நிர்வாகம் உத்தரவு

Published On 2021-07-22 08:46 GMT   |   Update On 2021-07-22 08:46 GMT
விருதுநகர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அருப்புக்கோட்டை தாலுகாவிற்கும், சூலக்கரையில் பணியாற்றிய மாரியப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், ஆமத்தூரில் பணியாற்றிய கணபதி, ராஜபாளையம் போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.

கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றிய பிரகாஷ், வீர சோழனுக்கும், பாண்டிய ராஜன் சூலக்கரைக்கும், மணிகண்டன் நரிக்குடிக்கும், தாமரைக்கண்ணன் அருப்புக்கோட்டை தாலுகாவிற்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

விருதுநகர் புறநகர் பிரிவில் பணியாற்றிய நமச்சிவாயம் நத்தத்துப்பட்டிக்கும், கமல் அ.முக்குளத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், விருதுநகர் புறநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வன்னியம்பட்டியில் பணிபுரியும் இலக்கியமுத்து, நத்தம்பட்டிக்கும், பந்தல்குடியில் பணியாற்றும் மீனாட்சிசுந்தரம் வெம்பக்கோட்டைக்கும், விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் நாகராஜ் வச்சக்காரப்பட்டிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றும் கண்ணன், சங்கரன் ஆகியோர் கூமாப் பட்டிக்கும், சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் கிருஷ்ணசாமி இருக்கன்குடிக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதேபோல ஏழாயிரம்பண்ணையில் பணியாற்றும் பாலசுப்பிரமணியன் இருக்கன்குடிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய சீனிகுருசாமி பரளச்சிக்கும், திருச்சுழியில் பணியாற்றிய கந்தசாமி வத்திராயிருப்புக்கும், சூலக்கரையில் பணியாற்றும் பெருமாள், நில அபகரிப்பு பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல மாவட்டத்தில் மேலும் 38 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களையும், 59 போலீசாரையும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News