செய்திகள்
வழக்கு பதிவு

சாராய விற்பனை, ஊறல் தொடர்பாக 72 வழக்குகள் பதிவு

Published On 2021-07-15 11:06 GMT   |   Update On 2021-07-15 11:06 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 11 சாராய ஊறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,625 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 61 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 1,828 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்தார்.
Tags:    

Similar News