செய்திகள்
கொரோனா வைரஸ்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா

Published On 2021-07-13 08:47 GMT   |   Update On 2021-07-13 08:47 GMT
விருதுநகர் மாவட்டத்தில் 495 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 30 கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45,112 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,050 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 495 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

நேற்று மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டது. மாவட்ட பட்டியலில் 7 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பட்டியலில் 30 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News