செய்திகள்
கைது

மணமேல்குடி அருகே கஞ்சா விற்றவர் உள்பட 2 பேர் கைது

Published On 2021-07-11 11:03 GMT   |   Update On 2021-07-11 11:03 GMT
மணமேல்குடி அருகே கஞ்சா விற்றவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி:

மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் அம்மாபட்டினம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 2 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஆதிபட்டினம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமானை பிடித்து விசாரித்தபோது, புதுக்குடி பகுதியிலிருந்து வாங்கி வந்ததாக கூறினார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் புதுக்குடி பகுதிக்கு சென்று அங்கு வீட்டில் வைத்து கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சந்திரா என்பவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News