செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் 82 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,343ஆக உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 82 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 40 ஆயிரத்து 343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 128 பேர் உள்பட, 39 ஆயிரத்து 236 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 799 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 308 ஆக உள்ளது.