செய்திகள்
மரணம்

பர்கூர் அருகே விபத்தில் மூதாட்டி பலி

Published On 2021-07-05 14:20 IST   |   Update On 2021-07-05 14:20:00 IST
பர்கூர் அருகே விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் தாலுகா ஒப்பதவாடி வரதப்பன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 65). சம்பவத்தன்று இவர் மொபட்டில் ஒப்பதவாடி காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் சாலையில் சரிந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News