செய்திகள்
பர்கூர் அருகே கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலி
பர்கூர் அருகே கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் எம்.ஜி.ஆர். நகர் செட்டியார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). ஜவுளிக்கடை ஊழியர். சம்பவத்தன்று இவர் பர்கூர்-ஜெகதேவி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் சரவணன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.