செய்திகள்
கொலை

காரை வழிமறித்து பிரபல ரவுடி வெட்டிக்கொலை- மர்ம கும்பல் வெறிச்செயல்

Published On 2021-06-30 14:48 IST   |   Update On 2021-06-30 14:48:00 IST
தளி அருகே பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் பதட்டமான நிலை இருந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கும்மளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது தேன்கனிகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், கர்நாடக மாநிலத்தில் 2 கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் சிறையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஜாமினில் வெளியே வந்துள்ளார்,

இந்த நிலையில் உதயகுமார் நேற்று இரவு 10 மணியளவில் தனது காரில் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிராமத்தில் உள்ள கவுரம்மா கோவில் அருகே வந்த போது காரை மர்ம கும்பல் வழிமறித்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதை கண்ட உதயகுமார் அதிர்ச்சி அடைந்தனர்,

உடனே சிறிதும் தாமதிக்காமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் காரை விட்டுகிழே இறங்கி ஒடினார். ஆனால் மர்ம கும்பல் உதயகுமாரை ஓட ஒட விரட்டி அரிவாளால் சராமாரியாக வெட்டி சாய்த்தனர். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே பலத்த வெட்டு காயம் அடைந்த உதயகுமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட பேலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி உதயகுமாரை மர்ம கும்பல் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதனால் உதயகுமாரை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல ரவுடி உதயகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் பதட்ட நிலை இருந்து வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிராம மக்களும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 

Similar News