செய்திகள்
மரணம்

கிருஷ்ணகிரி அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து கட்டிட தொழிலாளி பலி

Published On 2021-06-27 22:24 IST   |   Update On 2021-06-27 22:24:00 IST
கிருஷ்ணகிரி அருகே இரும்பு கம்பி தலையில் விழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் கமல் (வயது 40). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அவர் பெத்ததாளப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மேல்தளத்தில் இருந்த இரும்பு கம்பி ஒன்று கமலின் தலை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கமல் இறந்து விட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News