செய்திகள்
கைது

ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

Published On 2021-06-27 20:37 IST   |   Update On 2021-06-27 20:37:00 IST
ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் கிருஷ்ணாபுரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய விஜயகுமார் (வயது 28), மூர்த்தி (30), கிருஷ்ணன் (42), முனிராஜ் (26), பாலாஜி (32), சேஷாத்திரி (27) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,300 பறிமுதல் செய்யப்பட்டது.

ராயக்கோட்டை போலீசார் தண்ணீர்தொட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோவிந்தராஜ் (27), ஸ்ரீகாந்த் (18), முத்துக்குமார் (23), சங்கர் (28) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News