செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-06-27 20:21 IST   |   Update On 2021-06-27 20:21:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 39 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 69 வயது முதியவர், 68 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 156 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 39 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 38 ஆயிரத்து 35 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது ஆயிரத்து 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 295 ஆக உள்ளது.

Similar News