செய்திகள்
கோப்புபடம்

மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

Published On 2021-06-27 09:57 GMT   |   Update On 2021-06-27 09:57 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகியிருந்தனர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து678 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 79 பேர் பூரண குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 809 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 554 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News