செய்திகள்
கொரோனா தடுப்பூசி

உடையார்பாளையம் பகுதியில் இதுவரை 1,035 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-26 20:51 IST   |   Update On 2021-06-26 20:51:00 IST
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் மொத்தம் 1,035 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் நடைபெறும் தடுப்பூசி முகாமில், பொதுமக்களுக்கு தத்தனூர் பொட்டக்கொள்ளை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 45 பேரும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 15 பேரும் என நேற்று மொத்தம் 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை உடையார்பாளையம் பகுதியில் மொத்தம் 1,035 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Similar News