செய்திகள்
கோப்புபடம்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

Published On 2021-06-26 16:57 IST   |   Update On 2021-06-26 16:57:00 IST
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். புதிதாக 59 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்: 

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65, 64, 59 வயதுடைய ஆண்கள் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 41 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 609 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் 363 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி 3,175 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Similar News