செய்திகள்
தற்கொலை

தா.பழூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2021-06-25 18:40 IST   |   Update On 2021-06-25 18:40:00 IST
தா.பழூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மூர்த்தியான் தெற்கு தெருவை சேர்ந்த பால்ராஜின் மகன் செபஸ்டின் விஜய் (வயது 35). இவரது மனைவி ஜெனிபர். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜெனிபர் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஜெனிபரின் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு சென்னையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த செபஸ்டின் விஜய் கடந்த 22-ந் தேதியன்று இரவு மதுவில் எலி பசையை(விஷம்) கலந்து குடித்து விட்டார். அவரை மீட்ட உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெனிபர், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News