செய்திகள்
தற்கொலை

விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-06-23 15:24 GMT   |   Update On 2021-06-23 15:24 GMT
விக்கிரமங்கலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை காலனி தெருவை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 29). விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி(25). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ஏற்பட்ட குடும்ப தகராறையடுத்து தமிழ்ச்செல்வி, கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வியை சமாதானம் செய்து தனது வீட்டிற்கு வருமாறு புஷ்பராஜ் அழைத்துள்ளார். அதற்கு தமிழ்ச்செல்வி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த புஷ்பராஜ், தனது வீட்டில் விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) குடித்துள்ளார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புஷ்பராஜ் இறந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் புஷ்பராஜின் தந்தை பூராசாமி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News