செய்திகள்
கோப்புபடம்

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2021-06-20 14:40 IST   |   Update On 2021-06-20 14:47:00 IST
ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆவேரிக்கரையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 3 பேர் சுமார் 600 கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த பாலச்சந்திரனின் மகன் பாரதிதாசன்(வயது 23), காமராசுவின் மகன் சின்ராசு(24), ஜெயங்கொண்டம் காமராஜர் நகரை சேர்ந்த செல்வேந்திரன் மகன் பிரபாசங்கர்(21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News