செய்திகள்
மரத்தில் இருந்து தவறி கிணற்றில் விழுந்த தையல் தொழிலாளி உயிரிழப்பு
தையல் தொழிலாளி குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34),தையல் தொழிலாளி. இவர் குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த சுரேசை பிணமாக மீட்டனர்.
அவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த பண்டிதபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34),தையல் தொழிலாளி. இவர் குடிபோதையில் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்த மா மரத்தில் மாங்காய் பறிக்க ஏறியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப்படை வீரர்கள் கிணற்றில் தவறி விழுந்த சுரேசை பிணமாக மீட்டனர்.
அவரின் உடலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.