செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலையில் 197 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

Published On 2021-06-17 10:12 GMT   |   Update On 2021-06-17 10:12 GMT
திருவண்ணாமலையில் தற்போது 1,664 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 540 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேற்று 197 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை 46 ஆயிரத்து 951 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 44 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போது 1,664 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 540 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News