செய்திகள்
கொரோனா தடுப்பூசி

500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-15 12:46 GMT   |   Update On 2021-06-15 12:46 GMT
பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட வேலாயுத நகர், தெற்கு வெள்ளாளர் தெருவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள், முன்னுரிமை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 2 நாட்களில் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News