செய்திகள்
தற்கொலை

குன்னம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2021-06-15 12:41 GMT   |   Update On 2021-06-15 12:41 GMT
குன்னம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 19). பிளஸ்-2 படித்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனது தாய் ராசாத்தி திட்டியதால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து யாரும் இல்லாத போது குடித்துள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்த செய்தனர். பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியங்கா இறந்துவிட்டார். இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News