செய்திகள்
லப்பைக்குடிகாடு, வடக்கலூர் அகரம், திருமாந்துறை, ஒகளூர் கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மங்களமேடு:
லப்பைக்குடிகாடு பகுதியில், கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. இந்நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தன. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேல், சுகாதார ஆய்வாளர் மணி ஆகியோர் கொண்ட குழுவினர் மூலம் லப்பைக்குடிகாடு, வடக்கலூர் அகரம், திருமாந்துறை, ஒகளூர் கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பேரூராட்சியில் முகாமை செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாம்களில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.