செய்திகள்
கோப்புப்படம்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி - புதிதாக 98 பேருக்கு தொற்று

Published On 2021-06-13 18:00 GMT   |   Update On 2021-06-13 18:00 GMT
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 12,256 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 278 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,528 ஆக உயர்ந்துள்ளது. இதில் 169 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 12,256 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 278 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 1,102 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மாவட்டத்தில் 1,171 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,966 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 150 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News