செய்திகள்
தற்கொலை

ஆண்டிமடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-01 18:13 IST   |   Update On 2021-06-01 18:13:00 IST
ஆண்டிமடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் கிராமம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன்(வயது 52). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மன உளைச்சலில் இருந்த சின்னப்பன், சம்பவத்தன்று வீட்டில் பந்தல் கட்டும் கயிரால் தூக்கில் தொங்கினார். அதை பார்த்த அவரது மகன் ஜோசப் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சின்னப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னப்பனின் அண்ணன் அடைக்கலசாமி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News