செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,314 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,314 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1748 ஆக உயர்ந்தது. 12 ஆயிரத்து 905 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 26 பேர் உயிரிழந்தனர்.
இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 932 ஆக உயர்ந்துள்ளது. 6 ஆயிரத்து 902 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.