செய்திகள்
100 சதவீதம் பேர் தடுப்பூசி போட்ட முன்மாதிரி கிராமம்- அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ்
கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
வில்லியனூர்:
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் 2-வது அலை இந்தியாவில் சுனாமியாக பரவி தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தடுப்பூசி குறித்த வதந்தியால் அதை போட மக்கள் தயக்கம் காட்டினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறி தடுப்பூசி மையங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் புதுச்சேரி அருகே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் தங்களது கிராமத்தை மாநிலத்திலேயே முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
புதுச்சேரி அருகே ஏம்பலம் தொகுதி புதுக்குப்பம் கிராமத்தில் 750-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 240 பேரும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 270 பேரும் உள்ளனர். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால், அந்த வயது பிரிவை சேர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். விடுபட்டவர்களுக்கு நேற்று முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்மாதிரி கிராமமாக புதுக்குப்பத்தை புதுவை அரசு அறிவித்துள்ளது.
இதற்காக அந்த கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அப்போது கிராம மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கவர்னர் பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன், மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், சுகாதாரத்துறை செயலாளர் அருண்குமார், இயக்குனர் மோகன்குமார், துணை கலெக்டர் கிரில், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாதனை குறித்து புதுக்குப்பம் கிராம மக்கள் கூறுகையில், தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம். இதை உணர்ந்து எங்கள் கிராம பெரியவர்கள் முதலில் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியதால் அடுத்தடுத்து பலரும் தடுப்பூசி போட முன்வந்தனர்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுள்ளனர். எங்கள் கிராமத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டது பெருமையாக உள்ளது என்றனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் 2-வது அலை இந்தியாவில் சுனாமியாக பரவி தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தடுப்பூசி குறித்த வதந்தியால் அதை போட மக்கள் தயக்கம் காட்டினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறி தடுப்பூசி மையங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் புதுச்சேரி அருகே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் தங்களது கிராமத்தை மாநிலத்திலேயே முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
புதுச்சேரி அருகே ஏம்பலம் தொகுதி புதுக்குப்பம் கிராமத்தில் 750-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 240 பேரும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 270 பேரும் உள்ளனர். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால், அந்த வயது பிரிவை சேர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். விடுபட்டவர்களுக்கு நேற்று முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்மாதிரி கிராமமாக புதுக்குப்பத்தை புதுவை அரசு அறிவித்துள்ளது.
இதற்காக அந்த கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அப்போது கிராம மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கவர்னர் பாராட்டு தெரிவித்தார்.
விழாவில் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன், மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், சுகாதாரத்துறை செயலாளர் அருண்குமார், இயக்குனர் மோகன்குமார், துணை கலெக்டர் கிரில், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாதனை குறித்து புதுக்குப்பம் கிராம மக்கள் கூறுகையில், தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம். இதை உணர்ந்து எங்கள் கிராம பெரியவர்கள் முதலில் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியதால் அடுத்தடுத்து பலரும் தடுப்பூசி போட முன்வந்தனர்.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுள்ளனர். எங்கள் கிராமத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டது பெருமையாக உள்ளது என்றனர்.