செய்திகள்
கொரோனா வைரஸ்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-05-25 16:09 IST   |   Update On 2021-05-25 16:09:00 IST
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் இறந்தனர். மேலும் 264 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9,575 ஆக உயர்ந்துள்ளது. இதில் 72 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரும், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 64 வயதுடைய மூதாட்டி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,465 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,036 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News