செய்திகள்
சிவகாசி தாலுகாவில் 150 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு
பொதுமக்கள் வசதிக்காக 150 வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
சிவகாசி:
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவகாசி சப்- கலெக்டர் தினேஷ்குமார், அசோகன் எம்.எல்.ஏ., தாசில்தார் ராமசுப்பிரமணியன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ், சுகா தாரத்துறை அதிகாரி ஜெயச்சந்திரன், என்ஜினீயர் நாராயண சாமி மற்றும் 54 பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:-
சிவகாசி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் சிகிச்சைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். எனவே கிராமப்புறங்களில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோ னா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய்பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.
மருந்தகங்கள் இல்லாத கொத்தனேரி, ஈஞ்சார், செவளூர் பகுதியில் உள்ளவர்கள் அந்த கிராமத்தின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தேவையான மருந்துகளை வாங்கி கொள்ளலாம்.
பஞ்சாயத்து பகுதிகளில் தினமும் 40 பேருக்காவது பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் நோய் பாதிப்பை கண்டறியமுடியும். கிருஷ்ணபேரி, ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், நாரணாபுரம், விஸ்வநத்தம், பள்ளபட்டி, அய்யம்பட்டி. ஏ.துலுக்கப்பட்டி, சுந்தரராஜபுரம் ஆகிய பகுதியில் நோய் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கு கண்காணிப்பு பணிகளை பஞ்சாயத்து நிர்வாகங்கள் தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர்களும், தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக சிவகாசியில் 2 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கு காய்கறிகள் தனியாக விற்பனை செய்யப்படாது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி கமிஷனர்கள், சிவகாசி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொடுக்கும் அடையாள கடிதம் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் காய்கறிகள் வழங் கப்படும்.
இதேபோல் சிவகாசி தாலுகா முழுவதும் 150 வாக னங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் அடுத்து வரும் நாட்களில் கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பலசரக்கு பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவகாசி சப்- கலெக்டர் தினேஷ்குமார், அசோகன் எம்.எல்.ஏ., தாசில்தார் ராமசுப்பிரமணியன், யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்மோகன், ராமராஜ், சுகா தாரத்துறை அதிகாரி ஜெயச்சந்திரன், என்ஜினீயர் நாராயண சாமி மற்றும் 54 பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சப்-கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:-
சிவகாசி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் சிகிச்சைக்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். எனவே கிராமப்புறங்களில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோ னா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய்பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.
மருந்தகங்கள் இல்லாத கொத்தனேரி, ஈஞ்சார், செவளூர் பகுதியில் உள்ளவர்கள் அந்த கிராமத்தின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தேவையான மருந்துகளை வாங்கி கொள்ளலாம்.
பஞ்சாயத்து பகுதிகளில் தினமும் 40 பேருக்காவது பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் நோய் பாதிப்பை கண்டறியமுடியும். கிருஷ்ணபேரி, ஆனையூர், செங்கமலநாச்சியார்புரம், நாரணாபுரம், விஸ்வநத்தம், பள்ளபட்டி, அய்யம்பட்டி. ஏ.துலுக்கப்பட்டி, சுந்தரராஜபுரம் ஆகிய பகுதியில் நோய் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கு கண்காணிப்பு பணிகளை பஞ்சாயத்து நிர்வாகங்கள் தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து தலைவர்களும், தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக சிவகாசியில் 2 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்களுக்கு காய்கறிகள் தனியாக விற்பனை செய்யப்படாது. சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி கமிஷனர்கள், சிவகாசி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொடுக்கும் அடையாள கடிதம் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டும் காய்கறிகள் வழங் கப்படும்.
இதேபோல் சிவகாசி தாலுகா முழுவதும் 150 வாக னங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் அடுத்து வரும் நாட்களில் கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.