செய்திகள்
ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பு பணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்படுவர் - அமைச்சர்கள் தகவல்
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்:
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வுகள் அற்ற ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பு பணிைய தீவிரப்படுத்துவதிலும், மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்வதிலும், கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுைறகளை பின்பற்ற வலியுறுத்துவதுடன், விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வது அவசியம் ஆகும்.
மேலும் ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாவட்டத்தில் தாலுகா அளவில் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8,600 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 90 ஆயிரம் பேர் மற்றும் சேவை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தடுப்பு பணியிலும், சேவை பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களின் முக்கிய பணியாக வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய ெபாருட்களை நியாயமான விலையில், தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட பகுதிகளை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். இந்த பணியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்காணிப்பு குழுவிடம் விளக்கம் கேட்கலாம்.
பணியில் அமர்த்தப்படும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறையும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
ேமலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், டாக்டர் ரகுராமன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன், சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கண்ணன் முன்னிலையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்வுகள் அற்ற ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பு பணிைய தீவிரப்படுத்துவதிலும், மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்வதிலும், கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பு விதிமுைறகளை பின்பற்ற வலியுறுத்துவதுடன், விதிமுறைகள் பின்பற்றப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும் பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வது அவசியம் ஆகும்.
மேலும் ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாவட்டத்தில் தாலுகா அளவில் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8,600 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள 90 ஆயிரம் பேர் மற்றும் சேவை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தடுப்பு பணியிலும், சேவை பணியிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களின் முக்கிய பணியாக வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய ெபாருட்களை நியாயமான விலையில், தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட பகுதிகளை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். இந்த பணியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்காணிப்பு குழுவிடம் விளக்கம் கேட்கலாம்.
பணியில் அமர்த்தப்படும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறையும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
ேமலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், அசோகன், டாக்டர் ரகுராமன், தென்காசி எம்.பி. தனுஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றி வேந்தன், சுகாதார துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.