செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று - பலி எண்ணிக்கை 300-ஐ கடந்தது
மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,702 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 300-ஐ கடந்தது.
மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,702 ஆக உயர்ந்துள்ளது.
23,364 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,823 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 941 படுக்கைகள் உள்ள நிலையில் 811 படுக்கைகளில் கொரோனா பாதிப்படைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா சிகிச்சை மையங்களில் 1,459 படுக்கைகள் உள்ள நிலையில் 638 படுக்கைகளில் நோய் பாதிப்படைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 821 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் வடமலைக்குறிச்சி, முத்தால் நகர்,கவலூர் கிராமத்தில் 21 பேர், ஆமத்தூர், ஒண்டிப்புலி, நக்கீரன்தெரு, மீசலூர், கத்தாளம்பட்டி, சங்கரன் கிணற்று தெரு, மேலத்தெரு, பாத்திமா நகர், சிவந்திபுரம், ஆத்துமேடு, பெத்தனாட்சி நகர், புல்லலக்கோட்டை ரோடு, லட்சுமி நகர், சூலக்கரை, இனாம் ரெட்டியபட்டி, ஆர்.ஆர். நகர், நடுவப்பட்டி, சங்கரலிங்கபுரம், ஓ. கோவில்பட்டி, பெரிய வாடியூர், பெரிய பள்ளிவாசல் தெரு, பஜனை மடம் தெரு, அல்லம்பட்டி, முத்துராமன் பட்டி, கூரைக்குண்டு, சூலக்கரை, குமாரலிங்கபுரம், என்.ஜி. ஓ. காலனி மேற்கு, போலீஸ் நிலைய குடியிருப்பு, லட்சுமி நகர், புறவழிச்சாலை, முத்துராமன் பட்டி, கருப்பசாமி நகர், மோகன் ராஜேஷ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எரிச்சநத்தம், செட்டிகுறிச்சி, அத்திபட்டி, குருந்தமடம், அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி செவிலியர், அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு, ஆவியூர், காரியாபட்டி, சல்வார் பட்டி, துலுக்கன்குளம், வேளச்சேரி, உளுத்தி மடை, உலக்குடி, நரிக்குடி, பந்தல்குடி, சிவகாசி, நாரணாபுரம், அனுப்பங்குளம், வேப்பிலைப்பட்டி, வெம்பக்கோட்டை, வெற்றிலையூரணி, கஞ்சநாயக்கன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, நல்ல முத்தம்பட்டி, நள்ளி, சாத்தூர், படந்தால், ராஜபாளையம், சேத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், குன்னூர், ராமச்சந்திராபுரம், நத்தம்பட்டி, சேது நாராயணபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றும் மாவட்ட, மாநில பட்டியல்களுக்கிடையில் முரண்பாடு உள்ள நிலை தொடர்கிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 300-ஐ கடந்தது.
மாவட்டத்தில் மேலும் 660 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 27,702 ஆக உயர்ந்துள்ளது.
23,364 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,823 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 7 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 941 படுக்கைகள் உள்ள நிலையில் 811 படுக்கைகளில் கொரோனா பாதிப்படைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா சிகிச்சை மையங்களில் 1,459 படுக்கைகள் உள்ள நிலையில் 638 படுக்கைகளில் நோய் பாதிப்படைந்தோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 821 படுக்கைகள் காலியாக உள்ளன.
விருதுநகர் வடமலைக்குறிச்சி, முத்தால் நகர்,கவலூர் கிராமத்தில் 21 பேர், ஆமத்தூர், ஒண்டிப்புலி, நக்கீரன்தெரு, மீசலூர், கத்தாளம்பட்டி, சங்கரன் கிணற்று தெரு, மேலத்தெரு, பாத்திமா நகர், சிவந்திபுரம், ஆத்துமேடு, பெத்தனாட்சி நகர், புல்லலக்கோட்டை ரோடு, லட்சுமி நகர், சூலக்கரை, இனாம் ரெட்டியபட்டி, ஆர்.ஆர். நகர், நடுவப்பட்டி, சங்கரலிங்கபுரம், ஓ. கோவில்பட்டி, பெரிய வாடியூர், பெரிய பள்ளிவாசல் தெரு, பஜனை மடம் தெரு, அல்லம்பட்டி, முத்துராமன் பட்டி, கூரைக்குண்டு, சூலக்கரை, குமாரலிங்கபுரம், என்.ஜி. ஓ. காலனி மேற்கு, போலீஸ் நிலைய குடியிருப்பு, லட்சுமி நகர், புறவழிச்சாலை, முத்துராமன் பட்டி, கருப்பசாமி நகர், மோகன் ராஜேஷ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் எரிச்சநத்தம், செட்டிகுறிச்சி, அத்திபட்டி, குருந்தமடம், அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி செவிலியர், அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு, ஆவியூர், காரியாபட்டி, சல்வார் பட்டி, துலுக்கன்குளம், வேளச்சேரி, உளுத்தி மடை, உலக்குடி, நரிக்குடி, பந்தல்குடி, சிவகாசி, நாரணாபுரம், அனுப்பங்குளம், வேப்பிலைப்பட்டி, வெம்பக்கோட்டை, வெற்றிலையூரணி, கஞ்சநாயக்கன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, நல்ல முத்தம்பட்டி, நள்ளி, சாத்தூர், படந்தால், ராஜபாளையம், சேத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், குன்னூர், ராமச்சந்திராபுரம், நத்தம்பட்டி, சேது நாராயணபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றும் மாவட்ட, மாநில பட்டியல்களுக்கிடையில் முரண்பாடு உள்ள நிலை தொடர்கிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலை தொடர்கிறது.