செய்திகள்
விமானத்தில் வந்த மருத்துவ உபகரணங்கள்

வெண்டிலேட்டர்-மருத்துவ உபகரணங்கள் விமானத்தில் சென்னை வந்தன

Published On 2021-05-19 13:53 IST   |   Update On 2021-05-19 13:53:00 IST
நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது
ஆலந்தூர்:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதல் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது.

நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி இந்திய விமானப்படையின் தனி விமானம் நேற்று இரவு டில்லியிலிருந்து சென்னை பழைய விமானநிலையம் வந்தது. அதில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் வெண்டிலேட்டர்கள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் 35 பார்சல்களில், மொத்தம் 888 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தன.

சென்னை விமானநிலைய அதிகாரிகள் மருத்துவ பார்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

Similar News