செய்திகள்
சிதம்பரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சிதம்பரத்தில் பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஆன்லைனில் பங்கு சந்தையில் ஈடுபட்டு வந்தார்.
இதில் அவருக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.