செய்திகள்
திருத்தங்கலில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் - அசோகன் எம்.எல்.ஏ. தகவல்
திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என சிவகாசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் கூறினார்.
சிவகாசி:
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பத்திரிகைகள் மூலமும், சமூக வலை தளங்கள் வழியாகவும் நன்றி தெரிவித்தேன். கொரோனா கட்டுப்பாடு முடிந்த பின்னர் பொதுமக்களை நேரில் சந் தித்து நன்றி கூறுவேன். தற்போது கொரோனா காலம் என்பதால் பல தொழில்கள் நடைபெறாமல் உள்ளது. தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் உணவு பொருட்களை சிவகாசி தொகுதி மக்களுக்கு வழங்க உள்ளேன். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 125 சிலிண்டர்கள் தயார் செய்யப்படும். முதல் கட்டமாக 15 ஆக்சிஜன் சிலிண்டர்களை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி உள்ளேன்.
அரசு ஆஸ்பத்திரி மட்டும் இன்றி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்படும். அதே போல் உயிர்காக்கும் மருந்துகளும் சிவகாசி அரசு ஆஸ்பத் திரிக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படும்.
திருத்தங்கல்- விருதுநகர் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். அதேபோல் சுற்றுவட்டசாலைக்கான பணியும் தற்போது தொடங்கி உள்ளது.
இந்த பணிகளை 4 பிரிவுகளாக பிரித்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பணி ஒருவருடத்தில் முடியும். சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கொரோனா நோய் தடுப்புக்கு தேவையான மருந்துகளை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சப்-கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அசோகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பத்திரிகைகள் மூலமும், சமூக வலை தளங்கள் வழியாகவும் நன்றி தெரிவித்தேன். கொரோனா கட்டுப்பாடு முடிந்த பின்னர் பொதுமக்களை நேரில் சந் தித்து நன்றி கூறுவேன். தற்போது கொரோனா காலம் என்பதால் பல தொழில்கள் நடைபெறாமல் உள்ளது. தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் உணவு பொருட்களை சிவகாசி தொகுதி மக்களுக்கு வழங்க உள்ளேன். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 125 சிலிண்டர்கள் தயார் செய்யப்படும். முதல் கட்டமாக 15 ஆக்சிஜன் சிலிண்டர்களை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி உள்ளேன்.
அரசு ஆஸ்பத்திரி மட்டும் இன்றி தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்படும். அதே போல் உயிர்காக்கும் மருந்துகளும் சிவகாசி அரசு ஆஸ்பத் திரிக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படும்.
திருத்தங்கல்- விருதுநகர் ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். அதேபோல் சுற்றுவட்டசாலைக்கான பணியும் தற்போது தொடங்கி உள்ளது.
இந்த பணிகளை 4 பிரிவுகளாக பிரித்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பணி ஒருவருடத்தில் முடியும். சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கொரோனா நோய் தடுப்புக்கு தேவையான மருந்துகளை சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன், சப்-கலெக்டர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்.