செய்திகள்
மூலக்குளம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்குளம்:
மூலக்குளம் அடுத்த கல்மேடுபேட் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 49). இவரது மகள் சர்மிளா (26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சர்மிளாவுக்கு கர்ப்பப்பை கட்டி பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.