செய்திகள்
கைது

பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2021-05-07 10:48 GMT   |   Update On 2021-05-07 10:48 GMT
மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.
நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள மீனாட்சிபேட்டை பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் மாணவி அதே பகுதியில் உள்ள தனது பாட்டியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியின் பாட்டி வேலைக்கு சென்றதை அறிந்த மாதேஸ்வரன், மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதுபற்றி அறிந்த மாதேஸ்வரன், மாணவியை மீனாட்சி பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாணவியிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து மாணவியின் தந்தை,கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News