செய்திகள்
கைது

படப்பை அருகே 2 வாலிபர்களிடம் பணம், செல்போன் பறிப்பு- 3 பேர் கைது

Published On 2021-05-01 18:12 IST   |   Update On 2021-05-01 18:12:00 IST
படப்பை அருகே 2 வாலிபர்களிடம் கத்தி முனையில் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சமத்துவபுரம் முல்லைத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25), இவர் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள காரணித்தாங்கல் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது 3 பேர் கத்திமுனையில் மிரட்டி அவரது வீட்டுக்குள் அழைத்து சென்றனர். பிரகாஷ் மற்றும் அங்கு தங்கி இருந்த சுரேஷ் ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.1000-த்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து பிரகாஷ் ஒரகடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கத்தியால் வெட்டிய வழக்கில் வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வம் (23), நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த டில்லி பாபு (21), நந்தகோபால் (19) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1000 செல்போன், மற்றும் கத்தி உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர்.

Similar News