செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி- புதுவை பல்கலைக்கழகம் மேலும் 3 நாட்கள் மூடல்

Published On 2021-04-28 09:01 GMT   |   Update On 2021-04-28 09:01 GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.

புதுச்சேரி:

கொரோனா தொற்று அதிகரிப்பால் கடந்த 23-ந் தேதி முதல் நேற்று (27-ந் தேதி) வரை புதுவை பல்கலைக் கழகம் மூடப்பட்டது.

இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடப்படும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை புதுவை மத்திய பல்கலைக் கழகம் மூடப்படுகிறது.

பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய சேவை பணிகளுக்கு தடை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News