செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது

Published On 2021-04-27 18:02 IST   |   Update On 2021-04-27 18:02:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,142 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்தநிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 915 ஆக உயர்ந்தது. இதில் 8 ஆயிரத்து 848 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 432 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 190 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சைப் பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 508 உயர்ந்துள்ளது. அவர்களில் 2,793 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News