செய்திகள்
மதுபானம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-04-26 16:46 IST   |   Update On 2021-04-26 16:46:00 IST
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.9 கோடியே 96 லட்சத்து 96 ஆயிரத்து 980-க்கு மது விற்பனையானது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தினமும் சுமார் ரூ.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மது விற்பனை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிய தொடங்கினார்கள். இதனால் மது விற்பனையும் மும்முரமாக நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.9 கோடியே 96 லட்சத்து 96 ஆயிரத்து 980-க்கு மது விற்பனையானது.

Similar News