செய்திகள்
கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் குவிந்த மக்கள்
கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா மையங்கள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.
புதுச்சேரி:
கொரோனா முதல் அலை தீவிரம் குறைந்த நேரத்தில் பல இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் மட்டுமே நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் நிலைமை கட்டுக்குள் இருந்தது.
இந்தநிலையில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா மையங்கள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.
கூடுதலாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்தனர். ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
கொரோனா முதல் அலை தீவிரம் குறைந்த நேரத்தில் பல இடங்களில் தோற்றுவிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டன. மருத்துவமனைகளில் மட்டுமே நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் நிலைமை கட்டுக்குள் இருந்தது.
இந்தநிலையில் கொரோனா 2-வது அலை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா மையங்கள் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகின்றன.
கூடுதலாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவ மனைகளில் நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக அதிக அளவில் மக்கள் குவிந்தனர். ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.