செய்திகள்
தற்கொலை

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தூக்குப்போட்டு கணவர் தற்கொலை

Published On 2021-04-25 14:37 GMT   |   Update On 2021-04-25 14:37 GMT
மடுகரையில் ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கணவரை மனைவி கண்டித்ததால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

மடுகரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர் முகமது (வயது48). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி அல்மாஸ்பேகம் (38). இவர்களுக்கு சர்புதீன், உமர்அலி என்ற மகன்கள் உள்ளனர். அமீர் முகமதுவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதற்கிடையே அவர் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். குடிப்பழக்கத்தை விடும்படி அல்மாஸ்பேகம் கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று அமீர் முகமது வீட்டின் அருகே உள்ள குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News