செய்திகள்
கோப்புபடம்

கழிவுநீர் வாய்க்கால் தகராறு: அரசு அச்சக ஊழியர் மீது தாக்குதல்

Published On 2021-04-25 10:00 GMT   |   Update On 2021-04-25 10:00 GMT
வில்லியனூர் அருகே கழிவுநீர் வாய்க்கால் தகராறில் அரசு அச்சக ஊழியரை தாக்கியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் காலனி முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி அய்யம்மாள்(வயது42). இவர் புதுவை அரசு அச்சகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று மாலை அய்யம்மாள் தனது வீட்டின் எதிரே தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த கழிவுநீர் பக்கத்து வீட்டை சேர்ந்த சீத்தாராமன் என்பவரின் வீட்டின் பக்கம் சென்றது.

இதையடுத்து சீத்தாராமன் மற்றும் அவரது மனைவி தனம் மற்றும் சீத்தாராமனின் தந்தை நாராயணசாமி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி அய்யம்மாளை சரமாரியாக தாக்கினர்.

இதுகுறித்து அய்யம்மாள் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News