செய்திகள்
கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்கம்பி திருடிய 2 பேர் கைது

Published On 2021-04-24 11:44 GMT   |   Update On 2021-04-24 11:44 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்கம்பி திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் பகுதியில் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பம் ஒன்றை 2 பேர் உடைத்து கொண்டு இருப்பதாக மல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது மின்கம்பத்தை உடைத்து அதில் உள்ள இரும்பு கம்பியை திருட முயன்று கொண்டிருந்த 2 பேரை விசாரணை நடத்தினர். விசாரணையில் சாமிநத்தம் பகுதியை சேர்ந்த காளிராஜன் (வயது38), மகேஸ்வரன் (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News