செய்திகள்
ஜிப்மர் மருத்துவமனை

ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தம்

Published On 2021-04-23 07:49 GMT   |   Update On 2021-04-23 07:49 GMT
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு ஜிப்மரில் சிகிச்சை நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:

ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.26 முதல் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக இயங்காது.



* கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை நிறுத்தப்படுகிறது.

* அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் தொடரும்.

* அவசர சிகிச்சைகளை தவிர மற்ற அனைத்துவிதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News