செய்திகள்
கோப்புபடம்

சாத்தூர் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-04-22 20:22 IST   |   Update On 2021-04-22 20:22:00 IST
சாத்தூர் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 38). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் கடந்த 15-ந்தேதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார். பின்னர் அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் தொடர்பாக அம்மாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News