செய்திகள்
நகைக்கடை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
தளவாய்புரம் அருகே நகைக்கடை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம்:
தளவாய்புரம் அருகே உள்ள முகவூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 40). இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர் ராஜபாளையத்தில் உள்ள பிரபல நகைக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக ஜெகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.