செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-21 23:56 GMT   |   Update On 2021-04-21 23:56 GMT
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 729 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 17 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 729 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 237 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சில பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. அதன்படி வீரசோழன் தெற்கு தெரு, மானூர் வடக்கு தெரு, தம்மநாயக்கன்பட்டி, மூளிப்பட்டி, பெரியவள்ளிக்குளம் மற்றும் சூலக்கரை மேடு, வ.உ.சி.நகர் பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அரசு அறிவித்துள்ள நோய் கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருக்கும்.
Tags:    

Similar News