செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா

Published On 2021-04-18 17:38 GMT   |   Update On 2021-04-18 17:38 GMT
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 500 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர்:

மாவட்டத்தில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 17,615 ஆக உயர்ந்துள்ளது. 16,880 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். 500 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை நோய் பாதிப்புக்கு 235 பேர் பலியாகியுள்ளனர்.
Tags:    

Similar News