செய்திகள்
வழக்கு பதிவு

கொரோனா விதிமுறை மீறி பல்லக்கு ஊர்வலம்: பஞ்சாயத்து தலைவர் உள்பட 60 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-04-17 14:03 IST   |   Update On 2021-04-17 14:03:00 IST
கொரோனா வழிகாட்டுதல்களை மீறி ஊர்வலம் நடத்தியதாக பஞ்சாயத்து தலைவர் உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை பகுதியில், கிராம தேவதை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு, தேர்த்திருவிழா நடப்பது வழக்கம்.

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் தேரோட்டம் நடக்க வில்லை. நடப்பாண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால், திருவிழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, முன் அனுமதியின்றி பல்லக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து பாகலூர் கிராம நிர்ராக அலுவலர் பழனிவேலு கொடுத்த புகார்படி, கொரோனா வழிகாட்டுதல்களை மீறி ஊர்வலம் நடத்தியதாக பாகலூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயரமான் உள்பட 60 பேர் மீது, பாகலூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News